பலா பட்டறை: ஒரு பரதேசியின் பயணம் - பார்ட் 2

ஒரு பரதேசியின் பயணம் - பார்ட் 2


 சமீபத்தில் பதிவர் நண்பர் எறும்பு ராஜகோபாலின் குழந்தையின் முதல் பிறந்த நாள் முன்னிட்டு அவருடன் அம்பாசமுத்திரம் சென்றிருந்தேன். போன வருடமும் இதே தை மாதத்தில் அங்கு சென்றதால் இந்த முறை சில புதிய இடங்களைப் பார்த்துவிட முடிவு செய்திருந்தேன். எறும்பு குழந்தையின் பிறந்த நாளுக்காக பிஸியாகிவிட்டதால் சுற்றிக்காட்டும் முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர் நம்ம துபாய் ராஜா.

 பாசக்கார மனுஷன் அவருடைய பிறந்த நாள் அன்றைக்குக்கூட இந்த ஏழை எழுத்தாளனை வைத்துக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றிக் காண்பித்தார். 

முதல் நாள் அம்பை சென்று இறங்கியவுடன் ராஜகோபால் பிறந்தநாள் முதல் அவருக்கு பதனி சப்ளை செய்யும் பதனிக் கடை ஓனர் ஸ்பெஷலாக இள நுங்கு வெட்டிப்போட்டு பனை இலையில் பதனி ஊற்றித்தந்தார் பல வருடங்களுக்குப் பிறகு ஜில்லென்று ஒரு பானம் அடித்த கையோடு ஆற்றுக்குச் சென்றோம். 

“ராஜகோபால் இந்த ஆத்துல எதுனா விசேஷம் இருக்கா?”

“இருக்குங்க”

”என்னது?”

“வெளியூர்லேர்ந்து வர்றவங்கள நிறைய காவு வாங்கி இருக்கு.” 

(நல்ல எண்ணம்யா) நல்லவன் வாழ்வான்னு நினைத்துக்கொண்டே ஆற்றங்கரைக்குச் சென்றோம். நான் நினைவு தெரிந்து தமிழக ஆற்றில் கண்ட மலமணக் காட்சிகள் நாசி துளைக்க கரைக்குச் சென்றபோது கொல்லம்/செங்கோட்டை பாசஞ்சர் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக மேம்பாலம் கட்டிக்கொண்டிருந்தனர். அதாவது ஆங்கிலேயர் சற்றொப்ப 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய தூண்களை இடிக்க முடியாது அதன்மேலேயே ஒரு மேக்கப் போட்டு சுமார் 3 வருடங்கள் நெருங்கப்போகும் 'துரித' கதியில் வேலைகள் செம்மையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
                                   தாமிரபரணியின் மேலே அந்த மேக்கப் பாலம்

ஆற்றங்கரையில் நான் மனங்குளிரக் கண்ட ஒன்று மருத மரங்கள். ஓங்கி உலகளந்த உத்தம இயற்கையின் ரோமக் கால்களைப்போல சுமார் 30 அடி சுற்றளவும் 180 அடி உயரமும் வளரக்கூடிய நம் நாட்டின் பாரம்பரிய மரங்கள் வரிசையாய் பல நூற்றாண்டு வளர்ச்சியுடன் கம்பீரமாய் நிற்கிறது. மருத மரங்கள் கோவில் தேர் செய்யப் பயன்படுத்தப்படும் மரங்களில் ஒன்று, மேலும் ஆயுர்வேத மருத்துவங்களிலும், விருட்சாயுர்வேதத்திலும் இதன் பயன்பாடுகள் அதிகம் சொல்லப் பட்டிருக்கிறது. விஞ்ஞானப் பெயர் Terminalia arjuna (Combretaceae) எல்லாப் பருவ நிலைகளிலும் வளரும் இதைக் கன்றாகக் கொடுத்து வளர்த்தால் மழை வளம் பெருகும். ஆனால் அரசாங்கம் வளர்ப்பது ஒன்றுக்கும் உதவாத டில்லி மரங்களை :(( 

சுழல், புதைகுழி இருக்கும் பகுதி என்ற போர்டைக் கடந்து 5 அடி ஆழமுள்ள இடத்தில் மீன்கள் கடிக்க ஒரு குளிர் குளியலோடு வீடு வந்தால் துபாய் ராஜா ”வாங்க போலாம்” என்று வண்டியில் என்னை அழைத்துச் சென்ற இடம் மணிமுத்தாறு டாம். காய்ந்து கிடந்த கம்பீரமான டாமை புலிகளின் சரணாலயமான அடர்ந்த காட்டு வழிப் பாதையில் சென்று அடைந்தோம், காட்டு வழிப்பாதையிலேயே இதமான குளிரும் வன வாசமும் மனசை லேசாக்கியது. மணிமுத்தாறு அருவிக்குச் சென்றால் சென்ற வருடத்தில் பாபனாசம் அகஸ்தியர் அருவியில் அடைந்த அதே இன்பம். யாருமற்ற அருவிக் குளியல்! உயரம் அதிகமில்லை என்றாலும் நீரின் வேகத்தை உடல் தாங்க முடியாமல் தள்ளாடியது. அருவியின் எதிரிலேயே ஒர் அழகான அமைதியான எண்பதடி ஆழமான தடாகம் டைவ் அடித்து சொர்க்கத்திற்கு சென்றவர்கள் அதிகமாம். 

ச’னாவும் வராது, ப’னாவும் வராது ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி. என்று சொல்லிவிட்டு தேங்காய் சீனிவாசன் முறைப்பது போல அந்தத் தடாகம் என்னைப் பார்ப்பதுபோல இருந்தது. டைவ் அடிப்போமா என்றார் ராஜா.

எனக்கு கடப்பாறை நீச்சல்தான் தெரியும் என்பதை அவருக்குச் சொல்ல வாய் வந்தும் 

‘சாரி ராஜா பளக்கமில்ல எதுக்கு ரிஸ்கு?” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன். 

பராமரிப்பின்றி கிடக்கும் அணையின் பூங்காவைச் சுற்றிப்பார்த்தோம். அணையின் அருகிலிருந்த விவசாய நிலங்கள் செழிப்பாக இருந்தது. குறிப்பாக நேந்திரம் மற்றூம் ரோபஸ்ட்டா அதிகம் பயிராகி இருந்த வாழைத் தோப்புகள்.. அவ்வளவு பச்சை.

மணிமுத்தாறு அணை பற்றி சில குறிப்புகள்: நீரியல் திட்டம் 1 - உலகவங்கி நிதியுதவியுடன் 1958 ல் கட்டப்பட்டது. 
மொத்த நீளம்- 9605 அடி
முழு நீர் மட்ட உயரம் - 118 அடி
நீர்ப்பரவல் பரப்பு - 62.481 சதுர மைல்
முழுக்கொள்ளளவு - 5511 மி.க.அடி
மதகுகளின் எண்ணிக்கை - 3
உபரி நீர் போக்கி - 7
மொத்த பாசனப் பரப்பு - 25438 ஏக்கர்.

அடுத்து அவர் கூட்டிச் சென்றது சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை. அதைப் பற்றி வேறு ஒரு இடுகையில் பார்ப்போம். (பின்ன எப்படி டபுள் செஞ்சுரி அடிக்கறது?)

--

மறு நாள் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து குற்றாலம் போலாம் வாங்க என்று ராஜா அழைக்க ஒரு ட்ரிப் அடித்தோம். வழியில் பிரபல பதிவர்களின் ஊர்களைக் கடந்து குற்றாலம் சென்றபோது பழைய குற்றாலத்தில் மட்டும் உடல் நனையும்படிக்கு நீர் விழுந்து கொண்டிருந்தது.

 மற்ற தேனருவி, மெயின் அருவி, ஐந்தருவி எல்லாம் காய்ந்து கிடந்தது. அன்று தை அமாவாசை என்பதால் அதிக கூட்டம். ஷவரை விட சிறியதாக விழுந்த அந்தத்தண்ணீரிலும் தண்ணிபோட்டு  எண்ணெய் தேய்த்து குளிக்க நின்றிருந்த கும்பல் கண்டு நான் ராஜாவைப் பார்த்தேன். குளிக்கலாமா என்றார். பார்த்ததே பரம திருப்தி என்று சொல்லிவிட்டு கும்பலாய் சுற்றிஅலையும் குரங்குக் கூட்டங்களைப் பார்த்து பரவசமடைத்தோம்.

 (எப்பேர்ப்பட்ட வனத்துல மேஞ்சாலும் கடைசில இனத்துலதான் வந்து சேரனும்.:)


கல்லிடைக் குறிச்சியில் அப்பளங்கள் வாங்கி ராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரின் தந்தையோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். சிங்கம்பட்டியில் அவர்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்றதையும் அங்கு மாடியிலிருந்து கண்ட வயல்வெளிக் காட்சிகளையும் பற்றி பேச்சு வந்தபோது ஆயிரம் மாடுகளுக்கு மேல் சொந்தக்காரகளாக இருந்து அந்த மணிமுத்தாறு மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்பிய நாட்களை நினைவு படுத்திப் பேசினார். சர்வசாதரணமாக சிங்கம் பட்டியிலிருந்து அம்பைக்கு நடந்தே வந்து பள்ளியில் படித்தது, ஜமீன், புலிவேட்டை, புலியின் மாடு வேட்டை, டேம் கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்ட கிராமம். என்று பேச்சு டைம் மிஷினில் ஏறிச்சென்றது.

அன்றே அம்பையின் அருகில் இருக்கும் பிரம்மதேசம் சென்றோம். சென்ற முறையே அங்கு சென்றுவந்ததைப் பற்றி சொன்னேன். ஒரு கோவில் இருக்கு கண்டிப்பா பார்க்கணும் என்றார் ராஜா.

“சிவன் கோவில்தானே?”

“இல்லைங்க:

”:ஒரு கிருஷ்ணன் கோவில் இருக்கே அதா?”

”இல்லைங்க”

“அந்த நாலாயிரத்தம்மன்?” இல்லையென்று தலையாட்டியவரைப் பார்த்து வேற என்னங்க கோவில் இருக்கு பிரம்மதேசத்தில என்று கேட்டேன். நானும் இப்படித்தாங்க இருந்தேன், ஆனா கவிஞர் விக்கிரமாதித்தியன் சார்தான் எனக்கே இந்தக் கோவிலை அறிமுகப் படுத்தினார் என்று அவர் அழைத்துச் சென்ற கோவில் 

வாலீசுவரர் கோவில் - திருவாலீஸ்வரம் - தொல்லியல்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவில் தஞ்சை பெரியகோவிலுக்கும் பழைமையானது. மேலதிகத் தகவல்களுக்கு இந்த படத்தைப் பாருங்கள். 
                                கோவிலின் வாசலில் உள்ள அறிவிப்பு பலகை
                                                                             துபாய் ராஜா




மிக அழகான கோவில். தொல்லியல்துறை வசம் இருப்பதால் மாதத்தில் முக்கிய நாட்கள் நீங்க வேறு தினப்படி பூஜைகள் ஏதுமில்லை. நாங்கள் சென்ற நேரத்தில் பராமரிக்கும் அதிகாரி அங்கே இருந்ததால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். 

                                                         ராக்கெட் ராஜா!


திருநெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி, பதிவர் உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்களுடன் சந்திப்பு, சாத்தூர் மாக்கான் இராமசாமி கண்ணன் ஊரின் அருகில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் போன்ற விறுவிறுப்பான பதிவுகள்

பின் வரும் நாட்களில்.....


டிஸ்கி:-

(இந்த இடுகைய தமிழ்மணம் டாப் டென்ல கொண்டு வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் வேலையே இல்லாத நேரத்தில் மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே பதிவிடுகிறேன் நண்பர்களே!) :))

31 comments:

மணிஜி said...

குட் போஸ்ட் பலா..பகடி சரளம்:-))

CS. Mohan Kumar said...

நல்லாருக்கு ராக்கெட் ராஜா

Chitra said...

எல்லாப் பருவ நிலைகளிலும் வளரும் இதை கன்றாகக் கொடுத்து வளர்த்தால் மழை வளம் பெருகும் ஆனால் அரசாங்கம் வளர்ப்பது ஒன்றுக்கும் உதவாத டில்லி மரங்களை :((


....:-( really sad!

Chitra said...

அடுத்து அவர் கூட்டிச் சென்றது சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை. அதைப் பற்றி வேறு ஒரு இடுகையில் பார்ப்போம். (பின்ன எப்படி டபுள் செஞ்சுரி அடிக்கறது?)

....கண்டிப்பாக.... எழுத மறக்காதீங்க!

Chitra said...

திரு நெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி, பதிவர் உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்களுடன் சந்திப்பு, சாத்தூர் மாக்கான் இராமசாமி கண்ணன் ஊரின் அருகில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் போன்ற விருவிருப்பான பதிவுகள்

பின் வரும் நாட்களில்.....


......ஊரு நினைப்புல, ஏக்க பெருமூச்சு வந்துட்டு! எங்க நெல்லை மணம் கமழும் பதிவு.... ஒன்றி போய் வாசித்தேன்... விரைவில் எழுதுங்க....

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் பதிவு...

உணவு உலகம் said...

சும்மாத்தான சுத்தி பார்த்தீங்க, நெறைய சுட்டுட்டு வந்திருகீங்களே!
சீக்கிரம் வந்து அல்வா கொடுங்க!

Pranavam Ravikumar said...

Nice post..! Photos looks gud.

சாந்தி மாரியப்பன் said...

விறுவிறுப்பான இடுகைகளுக்காக காத்திருக்கிறோம்.. படங்கள் ஜூப்பர்.

King Viswa said...

//ராஜகோபால் இந்த ஆத்துல எதுனா விசேஷம் இருக்கா?”
“இருக்குங்க”
”என்னது?”
“வெளியூர்லேர்ந்து வர்றவங்கள நிறைய காவு வாங்கி இருக்கு.//
அடி தூள்.

//அருவியின் எதிரிலேயே ஒர் அழகான அமைதியான எண்பதடி ஆழமான தடாகம் டைவ் அடித்து சொர்க்கத்திற்கு சென்றவர்கள் அதிகமாம்.//

என்னண்ணே, ஒரே டெர்ரர் மேட்டரா சொல்றீங்க?


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

King Viswa said...

//திரு நெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி, பதிவர் உணவு உலகம் திரு.சங்கரலிங்கம் அவர்களுடன் சந்திப்பு, சாத்தூர் மாக்கான் இராமசாமி கண்ணன் ஊரின் அருகில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிங்கம்பட்டி ஜமீன் போன்ற விருவிருப்பான பதிவுகள்

பின் வரும் நாட்களி//

வெயிட்டிங், வெயிட்டிங்.


கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

க ரா said...

vango jii :)

vasu balaji said...

அருமை ராக்கட் ராஜா. என்ன வேறொரு இடுகையில் பார்ப்போம்னு சேம் ப்ளட் எஃபெக்ட் தூக்கலா இருக்கு:))

ஈரோடு கதிர் said...

//எப்பேர்ப்பட்ட வனத்துல மேஞ்சாலும் கடைசில இனத்துலதான் வந்து சேரனும்.:\\

மாப்புக்கு ஆப்பா!?

அப்புறம் இந்த ராக்கெட் ராஜாவ கேட்டதா சொல்லுங்க :)

செ.சரவணக்குமார் said...

சூப்பர் ஷங்கர்.. நம்ம ஊர்ப்பக்கமெல்லாம் போய்ட்டு வந்துருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.

ராக்கெட் ராஜா.. அசத்துறீங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் பதிவு...

Priya said...

நல்ல பதிவு, படங்களும் அழகு!

ஜோதிஜி said...

கடைசி வரிக்கும் கூகுள் பஸ் வார்த்தைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு அம்பாசமுத்திரம் அம்பானி சாட்சியாக.........

செல்ல வேண்டும் என்று நினைத்துள்ள ஊர் இது.

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
மரா said...

விட்டுட்டு போயிட்டு வந்துட்டு போஸ்ட் வேற போடுறீயளாக்கும். அட்லீஸ்ட் ஒரு கிலோ அல்வாவாவது வாங்கியாந்திருக்கலாம். சரி அந்த 100 வயசு பாட்டி மேட்டர் எப்போ
போடுவீங்க :)

ஹேமா said...

“வெளியூர்லேர்ந்து வர்றவங்கள நிறைய காவு வாங்கி இருக்கு.”

”ச’னாவும் வராது, ப’னாவும் வராது ஆனா பேரு மட்டும் சுப்ரமணிய பாரதி.”

ஒரே கலகலன்னு இருக்கு பதி்வு.துபாய் ராஜாவையும் சுகம் கேட்டேன்னு சொல்லிடுங்க ஷங்கர் !

Philosophy Prabhakaran said...

// திருநெல்வேலியின் ஒரிஜினல் அல்வா கிண்டப்படும் வீடியோ காட்சி //

இந்த ஒரு மேட்டரை அதிகம் எதிர்பார்க்கிறேன் சார்...

goma said...

என் மனதில் அம்பை பிளான் ஒன்று உருவாக வழி அமைத்து விட்டது உங்கள் பதிவு.நம் ஊரில்[புளியங்குடி] பக்கம் எத்தனையோ ரசிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் என் லிஸ்ட்டில் இருக்கின்றன.தோப்பில் குளியல்,கூட்டாஞ்சோறு கையேன்ந்தி பவன் சாப்பாடு....வயல்வெளிகளில் ஊடே நடை பயில...ஆசை ....

நசரேயன் said...

//நம் ஊரில்[புளியங்குடி] பக்கம் எத்தனையோ ரசிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் என் லிஸ்ட்டில்
இருக்கின்றன.//

நானே சொல்லனுமுன்னு நினைச்சேன் .. நீங்க முந்தீட்டீங்க

ஷர்புதீன் said...

welcome back shankar!

எல் கே said...

இவை எனக்குப் புதிய இடங்கள்

Anisha Yunus said...

//(இந்த இடுகைய தமிழ்மணம் டாப் டென்ல கொண்டு வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் வேலையே இல்லாத நேரத்தில் மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையே பதிவிடுகிறேன் நண்பர்களே!) :))///

aahaa... ennaa vevaramungnnaa... nadaththunga :))

துபாய் ராஜா said...

நீங்கள் ஒரு பரதேசி என்றால் நான் ஒரு நாடோடி. நாடோடியும், பரதேசியும் ஒரு கோட்டில் இணைவது இயல்பு தானே. நீங்கள் வந்த நேரம் நானும் ஊரில் irunthaen . ஒத்த கருத்து உள்ளவர்கள் என்பதால் நிறைய கருத்துக்கள் பகிர்ந்து kondoom. நம்மை இணைத்த ஆண்டவனுக்கும், நண்பர் கு(எ)றும்பு (ராஜ) கோபாலுக்கும் நன்றிகள் பலப்பல.

பாலா said...

சார்.. ஒரு ட்வுட்டு. எறும்பு குட்டி போடுமா, முட்டை போடுமா?

பாலா said...

//இது பலான பட்டறை அல்ல//

இங்கு ஆப்பு செய்யப்படுமா?

Paleo God said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! :))

@ சுண்டெலி : நல்லா இருக்கீங்களா தல! :))